அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Saturday, January 22, 2011

இரத்த தான முகாம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்,
                      அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் 22 -01 -2011 அன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
                      ஆண்களை காட்டிலும் அதிகமாக பெண்கள் இரத்த தானம் செய்ததே இந்த முகாமின் சிறப்பு.  இரத்தத்தை சேகரிக்க அதிக வசதி இல்லாததால் இரத்த தானம் செய்ய முடியாத மனக்குறையுடன் திரும்பி சென்றனர்.  இருந்தபோதிலும் தவ்ஹீத் ஜமாத்திற்கு அவசர காலத்தில் எந்த நேரமும் எங்களை அழைத்தால் இரத்தம் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக சொல்லிவிட்டு சென்றனர்.   
 மாவட்ட செயலாளர்ஆரிப் கான் தலைமையில் முகாமை துவக்கி வைத்த நகராட்சி தலைவர் சகோ. பஷீர் அஹமது அவர்கள் பெண்கள் போட்டி போட்டு இரத்தம் கொடுப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டு சென்றார்.                                              
சகோதரர் :DR  கருப்பசுவாமி  DR . ராஜ்மோகன்  மற்றும் சரவணன் (LAB TEC )
ஆகியோரின் தலைமையில் இரத்தம் சேகரிக்கும் பணியில்
ஈடுபட்டனர்
சகோதரர் :DR  கருப்பசுவாமி  DR . ராஜ்மோகன்  மற்றும் சரவணன் (LAB TEC )
ஆகியோரின் தலைமையில் இரத்தம் சேகரிக்கும் பணியில்
ஈடுபட்டனர்
மாவட்ட துணை செயலாளர் சகோதரர் கமர்தீன் உட்பட
ஏரளாமான TNTJ  சகோதரர்கள் கலந்து கொண்டனர்
இம்முகாமை எர்ணாவூர் ரஹீம் அவர்கள் தலைமையில்
TNTJ கீழக்கரை  நகர் தெற்குதெரு  மற்றும் 500plot நிர்வாகிகள்
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
வழக்கம் போல் அவதூறு பரப்பி முகத்தில் கரிபூசி அவமானபட்டுபோகும்
கும்பல் தன்பணியை இதிலும் செய்தது ரத்தத்தைகீழே வீசுகிறார்கள்
ரத்தம் கொடுக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்ய தவறவில்லை
அவர்கள் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்துவிட்டான்

எல்லாப்புகழும் இறைவனுக்கே. 







 அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ  ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
 நகர் கிளை,தெற்குதெரு கிளை, மற்றும் 500 plot கிளை.
கீழக்கரை.
   
1.JPG
2.JPG

3.JPG
4.JPG  
5.JPG  
6.JPG
DSC01047.JPG

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...