அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Sunday, January 30, 2011

பரிசுகள்


                                                                                                                                                                                 நமது TNTJ 500plot கிளை மஸ்ஜித் தக்வா பள்ளி
மதரசாவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு
பல போட்டிகள் வைத்து அவர்களுக்கு இரண்டு வாரத்திற்கு
ஒருமுறை பரிசுகள் வழங்கின்றோம் அதன் அடிப்படையில்
இந்த முறை அவர்களுக்கு தேர்வு நடத்த பட்டது
அதில் அதிக மதிப்பெண் பெற்றசகோதரர்  முஹம்மது அர்சத் அவர்களுக்கு
முதல் பரிசும்
சகோதரர் லக்கி ரசீம் 




   அவர்களுக்கு    இரண்டாம் பரிசும் சகோதரர்  ரசீத்       அவர்களுக்கு மூன்றாம் பரிசும்
30/01 /11  அன்று இஷா தொழுகைக்கு பிறகு வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, January 26, 2011

blood donation

அல்லாஹ்வின் திருப்பெயரால்
26/01/2011அன்று கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த
சகோதரர் ஒருவருக்கு நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
500plot  கிளை சார்பாகAபாசிடிவ் ரத்தம் ஒரு unit வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Monday, January 24, 2011


கீழக்கரையில் ரத்த தான முகாம்

First Published : 24 Jan 2011 12:08:35 PM IST



ராமநாதபுரம், ஜன. 23: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும், ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும் இணைந்து கீழக்கரையில் தன்னார்வ ரத்த தான முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜெ.எம்.ஆரிப்கான் தலைமை வகித்தார். கீழக்கரை நகர்மன்றத் தலைவர் பஷீர், ரத்த தான முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் கருப்புச்சாமி, அரசு மருத்துவர் ராஜ்மோகன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்புப் பணியினை செய்தனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை நிர்வாகிகள்  செய்திருந்தனர்.





Saturday, January 22, 2011

இரத்த தான முகாம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்,
                      அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் 22 -01 -2011 அன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
                      ஆண்களை காட்டிலும் அதிகமாக பெண்கள் இரத்த தானம் செய்ததே இந்த முகாமின் சிறப்பு.  இரத்தத்தை சேகரிக்க அதிக வசதி இல்லாததால் இரத்த தானம் செய்ய முடியாத மனக்குறையுடன் திரும்பி சென்றனர்.  இருந்தபோதிலும் தவ்ஹீத் ஜமாத்திற்கு அவசர காலத்தில் எந்த நேரமும் எங்களை அழைத்தால் இரத்தம் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக சொல்லிவிட்டு சென்றனர்.   
 மாவட்ட செயலாளர்ஆரிப் கான் தலைமையில் முகாமை துவக்கி வைத்த நகராட்சி தலைவர் சகோ. பஷீர் அஹமது அவர்கள் பெண்கள் போட்டி போட்டு இரத்தம் கொடுப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டு சென்றார்.                                              
சகோதரர் :DR  கருப்பசுவாமி  DR . ராஜ்மோகன்  மற்றும் சரவணன் (LAB TEC )
ஆகியோரின் தலைமையில் இரத்தம் சேகரிக்கும் பணியில்
ஈடுபட்டனர்
சகோதரர் :DR  கருப்பசுவாமி  DR . ராஜ்மோகன்  மற்றும் சரவணன் (LAB TEC )
ஆகியோரின் தலைமையில் இரத்தம் சேகரிக்கும் பணியில்
ஈடுபட்டனர்
மாவட்ட துணை செயலாளர் சகோதரர் கமர்தீன் உட்பட
ஏரளாமான TNTJ  சகோதரர்கள் கலந்து கொண்டனர்
இம்முகாமை எர்ணாவூர் ரஹீம் அவர்கள் தலைமையில்
TNTJ கீழக்கரை  நகர் தெற்குதெரு  மற்றும் 500plot நிர்வாகிகள்
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
வழக்கம் போல் அவதூறு பரப்பி முகத்தில் கரிபூசி அவமானபட்டுபோகும்
கும்பல் தன்பணியை இதிலும் செய்தது ரத்தத்தைகீழே வீசுகிறார்கள்
ரத்தம் கொடுக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்ய தவறவில்லை
அவர்கள் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்துவிட்டான்

எல்லாப்புகழும் இறைவனுக்கே. 







 அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ  ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
 நகர் கிளை,தெற்குதெரு கிளை, மற்றும் 500 plot கிளை.
கீழக்கரை.
   
1.JPG
2.JPG

3.JPG
4.JPG  
5.JPG  
6.JPG
DSC01047.JPG

Wednesday, January 19, 2011

மருத்துவ உதவி

அல்லாஹ்வின் பெயரால்
நமது TNTJ500plot  கிளை சார்பாக
கீழக்கரை ஆடருத்தான் தெருவை
சேர்ந்த சகோதரி தனது மகனின்
மருத்துவத்திற்க்காக நம் உதவியை
நாடியிருந்தார் அவருக்கு 19 /01 /11 அன்று
1500 ருபாய் மருத்துவ உதவி அல்லாஹ்வின்
உதவியால் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, January 18, 2011

காவல் துறையின் கருப்பு ஆடுகளை கண்டித்து போராட்டம்


அல்லாஹ்வின் திருப்பெயரால் 
காவல் துறையின்  கருப்பு ஆடுகளை 
 கண்டித்து போராட்டம் கடந்த 2008  ம் ஆண்டு 
 தமுமு க சமுதாய துரோகிகள் 
நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட 
வன்முறையில் கைது செய்யபட்ட  
சமூகவிரோதிகள் நமது தமிழ் நாடு 
தவ்ஹீத் ஜமாஅத் கிளை 
நிர்வாகிகள் பெயரை கொடுத்து உள்ளனர்
 TNTJ வின் வீரியமிக்க பல போராட்டத்தால் 
காழ் புணர்ச்சியில் இருந்த
காவல் துறையில் உள்ள  சில கருப்பு 
ஆடுகள் பழிவாங்கும் போக்கில் 
வேண்டும் என்றே நமது நிர்வாகிகள்
 மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் 
 தமிழ் நாடு முழவதும் முஸ்லிம்கள் மீது 
தொடர் பொய்வழக்கு போட்டு வரும் 
தமிழ்நாடு ஏவல் துறையையும் 
தமிழக முஸ்லிம் விரோத அரசையும் 
கண்டித்து  இராமநாத புரத்தில்
TNTJ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
  இதில் மாநில தலைவர் 
சகோதரர் பக்கீர்  முஹம்மது  அல்தாபி 
அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள் 
இப்போராட்டத்தில் ஏராளமானோர் 
கலந்து கொண்டு தங்களது 
கண்டனத்தை பதிவு செய்தனர் 




Sunday, January 16, 2011

வாரந்திர பயான்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ  500plot  கிளை மஸ்ஜித் தக்வாவில்
இந்த வாராந்திர பயானில் 500plot பொறுப்பாளர்
சகோதரர் அமீர் அப்பாஸ் அவர்கள் "நபிகளாரின் வாழ்வும்
நாம் பெறவேண்டிய படிப்பினையும் " என்ற தலைப்பில்
நபி (ஸல்)அவர்கள் வாழ்ந்த எளிமையான இன்று கற்பனை
கூட செய்ய முடியாத அந்த வாழ்க்கை முறையை
அழகாக விளக்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

ஜும் ஆ உரை

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது TNTJ  500plot  கிளை மஸ்ஜித் தக்வாவில்
இந்த வார ஜும் ஆ  உரை சகோதரர் அர்சத் அலி
அவர்கள் நிகழ்த்தினார்கள்  சோம்பல் என்ற
சைத்தானின் குணம் நம்மை எப்படி வழிகேட்டுக்கு
இழுத்து செல்லும் என்பதையும் அதில் இருந்து
மீள்வதற்கு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் )
அவர்கள் கற்று தந்த வழிமுறைகள் குறித்தும்
அவர்கள் விளக்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

Saturday, January 15, 2011

இவர்களை தெரிந்துகொள்ளுங்கள் இவர்கள்தான் முஸ்லிம்களை காக்க போருக்கு கிளம்பியவர்கள் ?

குர்ஆன் ஹதீஸ் எங்களுக்கு தேவை இல்லை (ஒப்புதல் விடியோ)


அன்பு சகோதர சகோதரிகளே வாழ்க்கையில் நமக்கு கிடைத்த மிக பெரும் அருள்பாக்கியம் நம்மை இஸ்லாமியனாக பிறக்க வைத்து அதில் அல்லாஹ் நம்மை நிலைபெற வைத்து இருப்பது தான்.

ஆனால் இன்று SDPI போண்ற இயக்கத்தை சார்ந்தவர்கள் அல்லாஹ்வின் இந்த மார்க்கத்தை வளைத்தும் மறைத்தும் இளைய சமுதாயத்தினரை தெளிவான வழிகெட்டிற்க்கு அழைத்து சென்று கொண்டு இருப்பதை நாம் கண் கூடாக கண்டு கொண்டு இருக்கின்றோம்.




இவை அனைத்திற்க்கும் எடுத்து காட்டாக தான் நமது இனையதளத்தில் நாம் வெளியிட்டுள்ள வினாயகர் சதுர்த்தி வாழ்த்து மற்றும் மரியமின் பிறந்த நாள் வாழ்த்து மற்றும் பொங்கள் வாழ்த்து பேணர்கள் அமைந்துள்ளன.






இதை எல்லாம் மீறி எஸ்.டி.பி. திருப்பூர் மாவட்ட தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் இஸ்லாத்தை தெளிவாக பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தில் இப்படியும் அமைப்புகள் உள்ளனவ ?? இவர்கள் இப்படியும் தங்கள் வாழ்க்கையை தரம் கேட்டு அமைத்துக் கொள்வார்களா ?? ஆட்சி அதிகாரத்தை இந்தியாவில் பிடிக்க வேண்டும் என்பதற்க்காக உயர்ந்தோன் அல்லாஹ்வின் வார்த்தைகளையும் நமது ஈருலக தலைவர் முஹ்மத் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையையும் புறக்கணிப்பார்களா ? என்ற கேள்விகள் எல்லாம் இஸ்லாமிய மக்களிடம் எழுந்துள்ளது....


இந்த செய்தியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உண்ர்வு, டி.என்.டி.ஜே இனையத்தளம் மற்றும் ஊடகங்களில் செய்திகளாக வெளியிட்டால். SDPI சார்ந்த சிலர் நாங்கள் அவதூறு பரப்புவதாகவும் இஸ்லாமிய மக்களிடம் ஒற்றுமையை சீர்குழைப்பதாகவும் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு இந்த சம்பவம் நடகாதது போல் மக்களின் சிந்தனையை திசை திருப்ப பார்க்கின்றது.

நாங்கள் பரப்புவது அவதூறு இல்லை என்பதை இந்த விடியோ உங்களுக்கு தெளிவுபடுத்தும் இன்ஷா அல்லாஹ்....

திருப்பூர் மாவட்ட SDPI தலைவர் அமானுல்லாஹ் எங்களுக்கும் குர் ஆன் ஹதீஸிற்க்கும் சம்மந்தம் இல்லை என்று ஒப்புக் கொண்ட விடியோ....



(விடியோ உங்கள் இன்டர்நெட் வேகத்தை பொருத்து ஒடும்)


உண்மையிலேயெ தவ்ஹீத் ஜமாஅத் தான் ஒற்றுமையை சீர்குழைக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. எப்படி என்றால் நீங்களே சற்று சிந்தித்து பாருங்கள் இன்றைக்கு குர் ஆன் ஹதீஸ் மட்டும் தான் இஸ்லாமியர்களுடைய கொள்கை என்ற மக்களை அழைத்து அடிப்படையில் ஒட்டு மொத்த சமுதாயத்தின் வரவேற்ப்பை பெற்று குர் ஆன் கூறும் வழியில் ஒற்றுமை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் டி.என்.டி.ஜே மட்டும் தான்.

ஒற்றுமை கோஷம் பேசும் இவர்க்ள் என்ன செய்து இருக்க வேண்டும் என்றால் இவர்களின் அமைபுகள் அனைத்தையும் கலைத்துவிட்டு ஓர் அணியில் திரண்டு இருக்க வேண்டும் இது போன்று திரளாததின் மூலம் இவர்கள் பேசும் ஒற்றுமை வாய் அளவில் தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள் ??
எப்படி அமைப்பை களைத்து ஒன்று சேர்ந்துவிட்டால் பதவி போய்விடுமே ????

உங்களின் இந்த நிலை பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

யூதர்களும் கிருஸ்த்துவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும் " எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ உதவுபவனோ உமக்கு இல்லை.
அல் குர் ஆன் 2:120

இதை தான் SDPI கூறுகின்றனர் மத நல்லிணக்கத்தை பேண தான் வாழ்த்து கூறுகின்றோம் என்று. ஆம் இவர்கள் வாழ்த்து கூறவேண்டும் என்று இவர்கள் கட்சியில் உள்ள மாற்று மத சகோதரர்கள் எதிர்பார்கின்றார்கள் கூறவில்லை என்றால் எங்கே கட்சியை விட்டு போய் விடுவார்களோ என்று இவர்களும் கூறுகின்றனர். இதை தான் மேல் கூறிய வசனம் மூலம் அல்லாஹ் நம்மை எச்சரிக்கின்றான்.

இது மட்டும் இல்லாமல் இன்னும் பல வசனங்கள் மூலம் SDPI பின்பற்றும் இது போன்ற செயல்கள் மாற்று மத காலாச்சாரம் என்பதும் தெளிவாக தெரிகின்றது.

முதலில் சற்று சிந்தித்து பார்ப்போம் இஸ்லாத்தில் மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்து கூறலாம் என்று உள்ளதா ஏன் இஸ்லாமிய பண்டிகைக்கு வாழ்த்து கூறலாம முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் சொல் செயல் அங்கிகாரத்தில் ஏதாவது சான்றை கூற முடியுமா ??

ஆனால் இதற்க்கு மாற்றமாக முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் பிற சமுதாய கலாச்சாரத்தை யார் பின்பற்றுகின்றனரோ அவர் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார் என்று கூறி இருக்கின்றார்கள். இதன் மூலம் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதன் மூலம் நாமும் பிற சமுதாய பழக்கத்தை பின்பற்றுபவர் ஆவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

SDPI யில் இருந்து கொண்டு குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஒரு சில சகோதரர்களுக்கு தான் இந்த செய்தி.

உங்களுக்கு உங்கள் தலைவரின் வார்த்தை முக்கியமா இல்லை நமது ஈருலக தலைவரான முஹ்மத் நபி(ஸல்) அவர்களின் வழிமுறை முக்கியமா ? ?

சிந்திப்பீர் !! செயல்படுவீர்!!  இஸ்லாத்தை காக்க


அழைப்பு பணியில் என்றும் அன்புடன் பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA
Related Posts Plugin for WordPress, Blogger...