அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியம் மற்றும் சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் உங்களது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உங்களது ஜகாத் பித்ராநன்கொடைகளை வழங்கி விட்டீர்களா : TNTJ கீழக்கரை கிளைகள்
தவறான வாதங்களும், தக்க பதில்களும் -Daily Updatedclick here

Saturday, January 15, 2011

இவர்களை தெரிந்துகொள்ளுங்கள் இவர்கள்தான் முஸ்லிம்களை காக்க போருக்கு கிளம்பியவர்கள் ?

குர்ஆன் ஹதீஸ் எங்களுக்கு தேவை இல்லை (ஒப்புதல் விடியோ)


அன்பு சகோதர சகோதரிகளே வாழ்க்கையில் நமக்கு கிடைத்த மிக பெரும் அருள்பாக்கியம் நம்மை இஸ்லாமியனாக பிறக்க வைத்து அதில் அல்லாஹ் நம்மை நிலைபெற வைத்து இருப்பது தான்.

ஆனால் இன்று SDPI போண்ற இயக்கத்தை சார்ந்தவர்கள் அல்லாஹ்வின் இந்த மார்க்கத்தை வளைத்தும் மறைத்தும் இளைய சமுதாயத்தினரை தெளிவான வழிகெட்டிற்க்கு அழைத்து சென்று கொண்டு இருப்பதை நாம் கண் கூடாக கண்டு கொண்டு இருக்கின்றோம்.




இவை அனைத்திற்க்கும் எடுத்து காட்டாக தான் நமது இனையதளத்தில் நாம் வெளியிட்டுள்ள வினாயகர் சதுர்த்தி வாழ்த்து மற்றும் மரியமின் பிறந்த நாள் வாழ்த்து மற்றும் பொங்கள் வாழ்த்து பேணர்கள் அமைந்துள்ளன.






இதை எல்லாம் மீறி எஸ்.டி.பி. திருப்பூர் மாவட்ட தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் இஸ்லாத்தை தெளிவாக பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தில் இப்படியும் அமைப்புகள் உள்ளனவ ?? இவர்கள் இப்படியும் தங்கள் வாழ்க்கையை தரம் கேட்டு அமைத்துக் கொள்வார்களா ?? ஆட்சி அதிகாரத்தை இந்தியாவில் பிடிக்க வேண்டும் என்பதற்க்காக உயர்ந்தோன் அல்லாஹ்வின் வார்த்தைகளையும் நமது ஈருலக தலைவர் முஹ்மத் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையையும் புறக்கணிப்பார்களா ? என்ற கேள்விகள் எல்லாம் இஸ்லாமிய மக்களிடம் எழுந்துள்ளது....


இந்த செய்தியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உண்ர்வு, டி.என்.டி.ஜே இனையத்தளம் மற்றும் ஊடகங்களில் செய்திகளாக வெளியிட்டால். SDPI சார்ந்த சிலர் நாங்கள் அவதூறு பரப்புவதாகவும் இஸ்லாமிய மக்களிடம் ஒற்றுமையை சீர்குழைப்பதாகவும் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு இந்த சம்பவம் நடகாதது போல் மக்களின் சிந்தனையை திசை திருப்ப பார்க்கின்றது.

நாங்கள் பரப்புவது அவதூறு இல்லை என்பதை இந்த விடியோ உங்களுக்கு தெளிவுபடுத்தும் இன்ஷா அல்லாஹ்....

திருப்பூர் மாவட்ட SDPI தலைவர் அமானுல்லாஹ் எங்களுக்கும் குர் ஆன் ஹதீஸிற்க்கும் சம்மந்தம் இல்லை என்று ஒப்புக் கொண்ட விடியோ....



(விடியோ உங்கள் இன்டர்நெட் வேகத்தை பொருத்து ஒடும்)


உண்மையிலேயெ தவ்ஹீத் ஜமாஅத் தான் ஒற்றுமையை சீர்குழைக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. எப்படி என்றால் நீங்களே சற்று சிந்தித்து பாருங்கள் இன்றைக்கு குர் ஆன் ஹதீஸ் மட்டும் தான் இஸ்லாமியர்களுடைய கொள்கை என்ற மக்களை அழைத்து அடிப்படையில் ஒட்டு மொத்த சமுதாயத்தின் வரவேற்ப்பை பெற்று குர் ஆன் கூறும் வழியில் ஒற்றுமை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் டி.என்.டி.ஜே மட்டும் தான்.

ஒற்றுமை கோஷம் பேசும் இவர்க்ள் என்ன செய்து இருக்க வேண்டும் என்றால் இவர்களின் அமைபுகள் அனைத்தையும் கலைத்துவிட்டு ஓர் அணியில் திரண்டு இருக்க வேண்டும் இது போன்று திரளாததின் மூலம் இவர்கள் பேசும் ஒற்றுமை வாய் அளவில் தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள் ??
எப்படி அமைப்பை களைத்து ஒன்று சேர்ந்துவிட்டால் பதவி போய்விடுமே ????

உங்களின் இந்த நிலை பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

யூதர்களும் கிருஸ்த்துவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும் " எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ உதவுபவனோ உமக்கு இல்லை.
அல் குர் ஆன் 2:120

இதை தான் SDPI கூறுகின்றனர் மத நல்லிணக்கத்தை பேண தான் வாழ்த்து கூறுகின்றோம் என்று. ஆம் இவர்கள் வாழ்த்து கூறவேண்டும் என்று இவர்கள் கட்சியில் உள்ள மாற்று மத சகோதரர்கள் எதிர்பார்கின்றார்கள் கூறவில்லை என்றால் எங்கே கட்சியை விட்டு போய் விடுவார்களோ என்று இவர்களும் கூறுகின்றனர். இதை தான் மேல் கூறிய வசனம் மூலம் அல்லாஹ் நம்மை எச்சரிக்கின்றான்.

இது மட்டும் இல்லாமல் இன்னும் பல வசனங்கள் மூலம் SDPI பின்பற்றும் இது போன்ற செயல்கள் மாற்று மத காலாச்சாரம் என்பதும் தெளிவாக தெரிகின்றது.

முதலில் சற்று சிந்தித்து பார்ப்போம் இஸ்லாத்தில் மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்து கூறலாம் என்று உள்ளதா ஏன் இஸ்லாமிய பண்டிகைக்கு வாழ்த்து கூறலாம முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் சொல் செயல் அங்கிகாரத்தில் ஏதாவது சான்றை கூற முடியுமா ??

ஆனால் இதற்க்கு மாற்றமாக முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் பிற சமுதாய கலாச்சாரத்தை யார் பின்பற்றுகின்றனரோ அவர் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார் என்று கூறி இருக்கின்றார்கள். இதன் மூலம் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதன் மூலம் நாமும் பிற சமுதாய பழக்கத்தை பின்பற்றுபவர் ஆவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

SDPI யில் இருந்து கொண்டு குர்ஆன் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஒரு சில சகோதரர்களுக்கு தான் இந்த செய்தி.

உங்களுக்கு உங்கள் தலைவரின் வார்த்தை முக்கியமா இல்லை நமது ஈருலக தலைவரான முஹ்மத் நபி(ஸல்) அவர்களின் வழிமுறை முக்கியமா ? ?

சிந்திப்பீர் !! செயல்படுவீர்!!  இஸ்லாத்தை காக்க


அழைப்பு பணியில் என்றும் அன்புடன் பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...